Thursday, August 12, 2010

Surah Al-Fatiha recitation

Surah Al-Fatiha [Emotional]

http://www.youtube.com/watch?v=u5G7kBV-yuE&feature=player_embedded#!


Emotional AL-FATIHA Recitation

http://www.youtube.com/watch?v=iPxLr3hDwGc&feature=related


One of the best AL-FATIHA Recitations

http://www.youtube.com/watch?v=JqbPcAp_k-8&feature=related




.

Monday, August 9, 2010

தீமைகளின் கிளையுதிர் காலம்

அஸ்ஸலாமு அலைக்கும்,

அல் ஹஸனாத்தில் வெளிவந்த கவிதையிலிருந்து சில பகுதிகள்.

தீமைகளின் கிளையுதிர் காலம்

அதோ...நோன்பு வருகிறது என் கல்பு நோக்கி கலிமா வருகிறது
மண்ணிலோ மண்ணுக்கு அடியிலோ அடுத்த ஆண்டிற்கான பயிற்சி பாசறை‍ வருகிறது.
ஓ...ரமலான் நீ எங்கள் இரத்தத்தை இனிப்பாக்க வருகிறாய் எங்கள் ஆன்மாவின் அழுக்கெடுக்க வருகிறாய்...
வா...அருகில் வா,
இனி எங்கள் வீட்டுத் தீமைகள் நெருப்பின் வாடை நுகரும்..
இனி என் தொழுகையின் அறுந்து போன ஆத்மிக நரம்புகள் உயிர் கொள்ளும்..

நடு இரவில் வியர்வையோடு விழிக்கிறேன் ஓ..ரமலான் வருகிறது. என் இதயத்தையும் வீட்டுக் கதவையும் நட்சத்திரங்களையும் அலங்கரிக்கின்றேன்.
நாளைய ஸஹருக்கு தயாராகின்றேன். தக்வா குத்பா ஓதுகின்றது, தாகமும் பசியும் யாருக்கு வேண்டும்?
நெற்றிகள் ஸூஜூதில்‍‍‍_கிடக்குமே கால்கள் கண்ணீரில் தேர் விடுமே,கொஞ்சக்கூடிய பிஞ்சுக் கால்களும் தராவீஹில் வீங்குமே
இடக்கை அறியாமல் ‍_ சிலரின் வலக்கையில் இதயங்கள் முளைக்குமே_அவை நோன்பு கால உயிரோவியங்கள்
நோன்பு ஒன்றும் காலையில் தூங்கி மாலையில் எழுந்து ஈத்தம் பழம் கடிக்கும் சம்பிரதாயமல்ல.
நோன்பு – மரம், இந்த மரம் மனிதனுக்கு தண்ணீர் ஊற்றும்
நோன்பு - குழந்தை இந்தக் குழந்தை தாய்க்கும் பாலூட்டும்
நோன்பு -சுவனத்து வாகனம் இது மனிதனின் இதயத்திற்கும் பெட்ரோல் ஊற்றும்
திரும்பிப் பாருங்கள் வரலாற்றுப் பார்வையில் நோன்பு சாதனை
இஸ்லாத்தின் ஜீவ மரண போராட்டம் ‍_ பத்ர் நோன்பு 17ல் தான் முன்னூற்றுப் பதினேழு முஹம்மத்கள், ஆயிரம் அபூஜஹ்ல்களின் கதை முடிந்தது.
ரமலான் 10ல் தான் ஏழை வயிற்றுக்குள் ஸகாத்துல் ஃபித்ராவின் சரித்திரம் புகுந்தது.
நோன்பு 9‍ல் தான் அஹ்ஸாப் யுத்தத்தின் அடி மண்ணிலே வீர மறவர்களின் வியர்வை விழுந்தது.
ரமலான் 21 ல் தான் தபூக் யுத்தத்தின் தடயங்களில் உரோமர்களின் உரோமங்களும் விழுந்தது.
ரமலான் 8 ல் தான் ஃபத்ஹ் மக்கா‍_ மக்கா வெற்றியில் மானுட இருள் மண்டியிட்டு ஓய்ந்தது.
தாரிக் பின் ஸியாத் கடலின் கரையடைந்து வந்த கப்பலை கொளுத்தி வெற்றி அல்லது வீர மரணம் என்று களம் புகுந்தபோது..ஸ்பெயினை இஸ்லாம் தழுவிக் கழுவிய போது ரமலான் 19!
ஸலாஹீத்தீன் அய்யூபி சிலுவை யுத்தத்தில் திருச்சபையை சிலுவையில் அறைந்து விட்டு வியர்வை துடைத்த போது நோன்பு 29!
ஐன் ஜாலூத்தில் தாத்தாரியர்கள் வியர்த்தோடிய போது நோன்பிற்கு வயது 7!
என் இனிய நண்பனே! தயாராகு இது இலையுதிர் காலமல்ல! தீமையின் கிளையுதிர் காலம். இந்த ரமலானை நாம் கைநீட்டி வரவேற்போம்.
"மரிக்கார்" அல் ஹஸனாத் ஆகஸ்ட் 2009, ரமலான் 1430

Tuesday, August 3, 2010

அல்குர்ஆனின் மாதம்

அல்குர்ஆனின் மாதம்


முஸ்லிம்களுக்கு அதிகம் நன்மைகளை ஈட்டிக்கொடுக்கும்
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி தான் இந்த ரமழான்.

இது நோன்பின் மாதமாகும்,

இது அல்குர்ஆனின் மாதமாகும்,

இது பொறுமையின் மாதமாகும்,

இது ஏழைகளுக்கு வாரி வழங்கும் மாதமாகும்,

இது இரவு வணக்கத்தின் மாதமாகும்,

இது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவை உடைய லைலதுல் கத்ர் இரவின் மாதமாகும்.

இப்படி பல பாக்கியங்களை உள்ளடக்கிய ரமழான் மாதமென்பது அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுவது போன்று: 'எண்ண முடியுமான சில நாட்களாகும்' (2: 184). எனவே குறிப்பிட் இந்த நாட்களில் ஒவ்வொரு முஸ்லிமும் நன்மைகளை அதிகம் செய்து அல்லாஹ்வின் பேரருளைப் பெற்ற நல்லடியார்களாக மாறவேண்டும். அதிகம் அதிகம் நன்மை செய்வதற்கு அழகான ஒரு சூழலை அல்லாஹ் அமைத்துத் தரும் போது கூட இதை ஒருவன் பயன்படுத்த தவரினால் அவன் வேரெந்த சந்தர்ப்பத்தை தான் பயன்படுத்துவான்!.

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமை
மார்க்கம் அனுமதித்தக் காரணங்கள் இன்றி நோன்பை விடுவது பெரும் குற்றமாகும்:

ரமழான் மாதத்தின் சிறப்பு

அல்குர்ஆன் அருளப்பட்ட மாதம், சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும்,
நரகத்திற்குரியவர்கள் விடுதலை,
பாவங்களுக்கு பரிகாரம், நன்மைகளை அதிகப் படுத்துவதற்கான அழைப்பு,
ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு,
நன்மையில் நிறைவான மாதம்...

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்பு

முன் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு,நோன்பு பரிந்து பேசும்,
நோன்பை போன்ற ஓர் வணக்கம் இல்லை,
கணக்கின்றி கூலி வழங்கப்படும்,நோன்பின் கூலி சுவர்க்கம்,நரகத்தை விட்டு பாதுகாப்பு,
மனோ இச்சைகளை விட்டுத் தடுக்கும்,
நோன்பாளிக்கு ஈருலகிலும் மகிழ்ச்சி,கஸ்தூரியை விட சிறந்த வாடை,
நோன்பு எனக்குரியது என்ற அல்லாஹ்வின் வாக்கு...

நோன்பாளி செய்யவேண்டியவைகள்

தொழுகையை உரிய நேரத்தில் ஜமாஅத்துடன் நிரைவேற்றல்,
அல்குர்ஆனை ஓதுதல், அதை விளங்குதல், அதன்படி செயல்படுதல்
ஸுன்னத்தான (உபரியான) வணக்கங்களில் அதிகம் ஈடுபடுதல்
தான தர்மம் செய்தல் ,,அதிகம் பிரார்த்தனைகளில் ஈடுபடுதல்

Tuesday, January 13, 2009

தசையை வலுப்படுத்தும் பசலைக்கீரை!

தசையை வலுப்படுத்தும் பசலைக்கீரை!

உடலுக்கு வலிமையை தரும் சக்தி, அசைவ உணவுக்கு மட்டுமல்ல, பசலைக்கீரைக்கும் உண்டு என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

லண்டனில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், 'அசைவ உணவு மூலம் கிடைக்கும் சத்துக்கள் இந்த பசலைக்கீரையில் உண்டு என்பதும், இதை சாப்பிட்டால் உடல் வலிமை பெறுவதோடு, தசைகளும் வளர்ச்சி பெறும்' என்பதும் தெரியவந்துள்ளது.

பரிசோதனைக் கூடத்தில், மனித தசைகளின் மாதிரிகளில் இந்த உயிர்ச்சத்தை செலுத்தியபோது அவை 20 சதவீதம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்தன.

பரிசோதனை எலிகளுக்கு, பசலைக்கீரையை உணவாக கொடுத்து பரிசோதித்ததில், ஒரே மாதத்தில் எலிகள் அதிக பலம் பெற்றிருப்பது தெரியவந்தது.

இதுதவிர, பசலைக்கீரைகள் கண் நோய்கள், பல் சம்பந்தப்பட்ட நோய்கள், வைட்டமின் குறைவால் ஏற்படும் ஸ்கர்வி நோய் ஆகியவைற்றை குறைக்கிறது. மாரடைப்பை தடுக்கும் ஆற்றலும் பசலைக்கீரைக்கு உண்டு என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கேடுகளை அகற்ற 'அவரை' வைத்தியம்

நம் அன்றாட உணவில் எடுத்துக்கொள்ளப்படும் காய்கறியில் ஒன்றான அவரை, உடல் நலக்கேடுகளை அகற்றும் மருந்தாகவும் செயல்படுகிறது.

* முதிர்ந்த அவரையை சமைத்து சாப்பிட்டால், அஜீரணக் கோளாறுகள் நீங்கும். அத்துடன், நெஞ்செரிச்சலையும் இது போக்க வல்லது.

* அவரைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால், தலைவலி, வயிற்றுப் போக்கு போன்றவை நீங்க உறுதுணை புரியும்.

* நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்கும் திறனும் அவரைக்கு உண்டு.

* உடம்பில் கட்டிகள் நீண்ட நாட்களாக இருப்பின், அவரை இலைச்சாற்றில் பஞ்சை நனைத்து, கட்டியின் மீது ஒட்ட வேண்டும். அந்தப் பஞ்சில் அடிக்கடி அவரை இலைச்சாற்றை விட்டுவந்தால், கட்டிகள் மறைந்து போகும்.

* குழந்தைகளுக்கு வயிற்று வலி இருப்பின், அவரைப் பிஞ்சினை மைய அரைத்து, அதை விளக்கெண்ணெயில் குழைத்து தொப்புளைச் சுற்றி தடவ வேண்டும்.

Thursday, December 11, 2008

பரமக்குடியில் தியாகத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

பரமக்குடியில் தியாகத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி
மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன

பரமக்குடியில் தியாகத்திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 09 டிசம்பர் 2008 செவ்வாய்க்கிழமை மாலை கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கீழமுஸ்லிம் ஜமாஅத் சபை தலைவர் எஸ்.என்.எம். முஹம்மது யாக்கூப் தலைமை தாங்கினார். கீழ முஸ்லிம் ஜமாஅத் சபை செயலாளர் எஸ்.என்.ஏ. முஹம்மது ஈசா, மேல முஸ்லிம் ஜமாஅத் தலைவர் அப்துல் கபூர், ரயில்வே பள்ளி தலைவர் ஆர் எஸ் ஒய். பஷீர் அஹ்மது, தெற்குப் பள்ளி தலைவர் முத்து நைனார், கொல்லம்பட்டரை ஜமாஅத் தலைவர் நைனா முஹம்மது, பாரதி நகர் ஜமாஅத் தலைவர் வழக்கறிஞர் ஏ கமால், எஸ்.ஆர்.பட்டணம் ஜமாஅத் தலைவர் நைனா முஹம்மது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஜவ்வாதுப் புலவர் மன்ற தலைவர் டபிள்யூ. நூருல் அமீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

பள்ளி மாணவர்களுக்கு ஹதிஸ் ஒப்பித்தல், திருக்குர்ஆன் மனனப் போட்டி, பாங்கு சொல்லும் போட்டி,கயிறு இழுக்கும் போட்டி,இறகுப் பந்து
போட்டி, இஸ்லாமியப் பாடல்கள் போட்டி உளிட்ட எட்டு போட்டிகள் பரமக்குடியில் உள்ள ஏழு மதரஸா மாணாக்கர்களுக்கு நடத்தப்பட்டன. இதில் சுமார் 160 க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பங்கேற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்கி பரமக்குடி எஸ்.டி. கூரியர்ஸ் உரிமையாளர் காசிம் முஹம்மது, கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் ஜி.எம். ஷேக் தாவுது, ரோட்டரி சங்க தலைவர் சாதிக் அலி,நகர் மன்ற உறுப்பினர்கள் அப்துல் மாலிக், அஹமது மீர் ஜவ்வாது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பரமக்குடி நகர் தலைவர் ஏ.பி. சீனி அலியார், கீழமுஸ்லிம் தொடக்கப்பள்ளி தாளாளர் சாதிக் பாட்சா, கேஜே மேல்நிலைப்பள்ளி தாளாளர் அப்துல் ரஹீம், கேஜே நர்சரி தொடக்கப்பள்ளி தாளாளர் முஹம்மது உமர், தொழிலதிபர் கான், சலாம் டிராவல்ஸ் அதிபர் அப்துல் சலாம், பரமக்குடி இஸ்லாமிய இளைஞர் சபையின் ஆலோசகர் வழக்கறிஞர் ஒலி முஹம்மது, புரபஷனல் கூரியர்ஸ் அப்துல் அஜீஸ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு கேடயமும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் சிராஜுல் உம்மத் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பஇ, முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர் மன்பஇ, மாவட்ட உலமாக்கள் சபை தலைவர் மௌலவி வலியுல்லாஹ் நூரி, கீழப்பள்ளி இமாம் மௌலவி ஜலாலுதீன் மன்பஇ, இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி விலங்கியல் துறை
பேராசிரியர் முனைவர் எஸ். ஆபிதீன், ஹாஜி அலி பிர்தௌஸி உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் சமூக அக்கறையுடன் உரை நிகழ்த்தினர்.

நிகழ்ச்சியினை ஜவ்வாதுப் புலவர் மன்ற செயற்குழு உறுப்பினர் ஜெ. ஹிதாயத்துல்லாஹ் தொகுத்து வழங்கினார். ஜவ்வாதுப் புலவர் மன்ற செயலாளர் அஸ்கர் அலி நன்றியுரை நிகழ்த்தினார்.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கே. ஏ. ஹிதாயத்துல்லாஹ் (9750105141) மற்றும் ஜவ்வாதுப் புலவர் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது அரிதானது. பெருநாளன்றே இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது சமுதாய மாணாக்கர்கள் மத்தியில் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது என பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். இது போன்ற நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்ற தங்களது அவாவினை ஜவ்வாதுப் புலவர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tuesday, December 2, 2008

அல்ஹாஜ் மவ்ல‌வி ஜ‌லீல் சுல்தான் ஆலிம் ம‌ன்ப‌இ

ந‌ம‌தூரைச் சேர்ந்த‌ திருச்சி ட‌வுண் காஜி அல்ஹாஜ் மவ்ல‌வி ஜ‌லீல் சுல்தான் ஆலிம் ம‌ன்ப‌இ அவ‌ர்க‌ள் நேற்று புனித‌ ஹ‌ஜ் பய‌ண‌ம் மேற்கொண்டுள்ளார்.

அவ‌ர‌து ப‌ய‌ண‌ம் சிற‌ப்புற‌ வாழ்த்துகிறோம்.

ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத்

Friday, July 4, 2008

முதுகுளத்தூரில் மறைந்த தலைவர் பனாத்வாலா சாஹிபுக்கு யாசின் ஓதி துஆ

முதுகுளத்தூரில் மறைந்த தலைவர் பனாத்வாலா சாஹிபுக்கு யாசின் ஓதி துஆ


முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் குலாம் முகம்மது பனாத்லாவா அவர்கள் வஃபாத்தானதையடுத்து 27-06-08 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப்பின் யாசின் ஓதி துஆ செய்யப்பட்டது.

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி பஷீர் சேட் ஹஜ்ரத் அவர்கள் தலைமையில் யாசின் ஓதி துஆ செய்யப்படது.

இந்நிகழ்வில் ஜமாஅத் நிர்வாகிகள், முஸ்லிம் லீக் நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர்.